Header Ads

இலங்கையில் ஜும்ஆத் தொழுகையையும் ஐவேளை ஜமாஅத் தொழுகையையும் நிறுத்த கோரிக்கை

இலங்கையில் முஸ்லிம்கள் ஜும்ஆத் தொழுகைகளையும் ஐந்து நேரத் தொழுகைகைள கூட்டாக தொழுவதையும்  மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த WHO மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் மஸ்ஜித்களில் ஐங்கால தொழுகை உட்பட ஏனைய அனைத்து ஒன்று கூடல்களையும்  மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு  ஜம்மியதுல் உலமா கேட்டுக் கொண்டுள்ளது.

Powered by Blogger.