சனிக்கிழமை நாடு திரும்பும் சந்திரிகா; உடனடியாக களத்தில்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
நாடு திரும்பியதும் உடனடியாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களை ஒன்றுதிரட் மொட்டுக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மொட்டுவுடன் இணைந்து கொண்டமைக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மொட்டுவுடன் இணைந்து கொண்டமைக்கு கடுமையான எதிர்ப்பை வௌியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

Post a Comment