வவுனியாவில் இராணுவ வீரர் மீது தாக்குதல்
வவுனியா போகஸ்வெவ இராணுவ சோதனைச் சாவடியில்
கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் அல்லது கும்பல் அவரின் துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.
இந்நிலையில் அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் படையில் இருந்து தப்புயோடிய முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment