Header Ads

04 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தின் 05 பேருக்கு கொரோனா - சிலபத்தில் சோக சம்பவம்

சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இதனைக் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் 4 மாதக் குழந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை் செய்யப்பட்டதை அடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இலங்கையில் இதுவரை 122 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Powered by Blogger.