Header Ads

ஊரடங்கு சட்ட காலத்தில் கணவனிடம் அடி வாங்கிய 25 மனைவிமார் வைத்தியசாலையில்

ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 25ற்கும் மேற்பட்ட வீட்டுத் தலைவிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவர்மார்களின் தாக்குதல்களால் இவர்கள் இவ்வாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தங்களது கணவருக்கு போதைப்பொருள் கிடைக்காத காரணத்தினால் வீட்டு வன்முறையில் ஈடுபட்டதாக அவர்கள் புகார் செய்துள்ளனர்.

இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.