Header Ads

தனியார் மருந்தகங்களுக்கு அரசு விடுத்துள்ள உத்தரவு

விசேட வைத்தியர் ஒருவரின் சரியான மருந்து குறிப்பு இல்லாமல் "Chioroquine" மற்றும் "Hydroxychioroquine" எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களை மீறும் ஒவ்வொரு நபரும் குற்றமிழைத்தவர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் பிரிவு 131 ன் கீழ் வழக்குத் தொடப்படும் என அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.