Header Ads

இலங்கையிலும் கால்பதித்தது கொரோனா - முதலாவது இலங்கையர்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் I.D.H மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா வழிகாட்டியான அவர் இத்தாலி சுற்றுலாப் பயணிகளுடன் சுற்றித்திரிந்ததால் அவருக்கு இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.
Powered by Blogger.