Header Ads

நாட்டின் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக மீறியுள்ள முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்

இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற தொலைக்காட்சி ஒன்று கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தை ஒதுக்கிவைத்து இரசிகர்கள் கூட்டத்தை அமைத்து சித்திரைப் புதுவருடத்திற்கான முன்கூட்டிய ஒளிப்பதிவுகளை செய்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமையும் இப்படியான நிகழ்ச்சி பதிவு இடம்பெற்றிருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி சகிதம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்களத் தமிழ் சித்திரைப் புத்தாண்டு தினத்தில் முழுநேர நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாட்டு காட்சிகளை அந்த நிறுவனம் தற்சமயம் பதிவுசெய்து வருகின்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள் வைரலாகப் பரவியுள்ளன.
Powered by Blogger.