வெலிகமயில் முஸ்லிம் பெண் ஒருவர் திடீர் மரணம் - அடக்கம் செய்ய பொலிஸார் தடை
வெலிகம புதிய வீதி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் பெண் ஒருவர் இன்று காலை திடீரென மரணித்ததை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய பொலிஸார் தடை விதித்துள்ள சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
54 வயதுடைய குறித்த பெண் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலை தனியார் வைத்தியசாலைக்கு அவரது குடும்ப உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
அரச வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி தனியார் வைத்தியசாலை நிர்வாகம் அறிவுறுத்தியதை அடுத்து மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது குறுக்கீடு செய்த வெலிகம பொலிஸார், உடலை மரண விசாரணைக்காக மாத்தறை அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த பெண் நீண்ட காலமாக நீரிழிவு உட்பட சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Post a Comment