Header Ads

சிறிகொத வளாகத்தின் நுழைவாயில் மூடப்பட்டதா?



சிறிகொத வளாகத்தின் நுழைவாயில் மூடப்பட்டு எவரையும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படும் பொய்யான செய்தி இனந்தெரியாத சிலரால் பரப்பப்படுவதாகவும், அது பொய்யான செய்தி எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சஜித் பிரேமதாக இன்று நடாத்த திட்டமிட்டிருந்த நிகழ்வை பிற்போடுவதே சிறந்தது என நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும், அந்த செய்தியை அறிவிக்க முடியாத பிரதிநிதிகளை வொக்ஷ்ல் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் சந்திப்பதற்கு சஜித் பிரேமதாச இணங்கியதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.


Powered by Blogger.