ரணிலின் STF பாதுகாப்பு நீக்கம் - சஜித்தின் பாதுகாப்புக்கு விஷேட அதிரடிப்படை
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் திலக் மாரபனவுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படை பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிட்டதன் காரணமாக அவரின் பாதுகாப்பு இன்னமும் நீக்கப்படவில்லை என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment