2015ல் மஹிந்த செய்ததைப் போன்று சஜித்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித்திற்கு வழங்கப்படவில்லை என்றால் மாற்றுவழி ஒன்றை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
தற்கோது கூட அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுடனான நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாடு பூராகவும் தற்போது சஜித் பிரேமதாஸவுக்கு பாரிய கேள்வி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2015ல் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அதனூடாக முன்னோக்கி வந்து அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது போன்ற நிலை சஜித் பிரேமதாஸவுக்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Post a Comment