பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டியது படித்தவர்களை அல்ல - தேஷப்பிரியவின் அதிரடிக் கருத்து
படித்தவர்களை மாத்திரமே பாராளுமன்றத்திற்கு அனுப்புவது என்பது முக்கியமானதல்ல என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராவதற்கு படிப்பறிவு என்பது முக்கியம் பெறுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அதற்கு தேவைப்படுவது, விடயங்களைப் புரிந்து கொண்டு ஆய்வு செய்து தீர்வை பெற்றுக் கொடுக்க முடியுமாக இருப்பதே என்று அவர் கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Post a Comment