Header Ads

சற்றுமுன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்ட அறிவிப்பு

அனைத்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் தீர்மானம் என்பன அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளினாலேயே தீர்மானிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மக்களின் வாழ்க்கைக்கு பாதகத்தை ஏற்படுத்த கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள பிரதேசங்களுக்கு அனுமதியில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டளைகள், ஊடரங்கு சட்டத்தினை அமுல் படுத்துவதற்கான பிதேசத்தை தெரிவு செய்தல் மற்றும் தனிமைப்படுத்துவதற்குரிய பிரதேசங்களின் பெயர்களை வெளியிடுதல் ஆகிய தீர்மானங்களை அரசாங்கத்தின் உயர்பீடமே தீர்மானிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமுலில் காணப்படுகின்ற ஊரடங்கு உத்தரவின் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படவேண்டிய தேவைகள் காணப்படுமாயின் அதனை கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பணிக்குழுவின் வாயிலாகவே அறிவிக்கபடும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.