Header Ads

அங்கும் இங்குமாக தாவிக் கொண்டிருந்த வசந்த சேனாநாயக்கவுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் பல முறை கட்சி தாவிய இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கவின் பேரனான வசந்த சேனாநாயக்கவுக்கு இம்முறை மூன்று பிரதான கட்சிகளிலும் வேட்புமனு வழங்கப்படவில்லை.

கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கும் இம்முறை மூன்று பிரதான கட்சிகள் வேட்புமனுக்களை வழங்கவில்லை.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கலாநிதி சரத் அமுனுகம, வசந்த சேனாநாயக்க, பைசர் முஸ்தபா, எஸ்.பி. நாவின்ன, நிஷாந்த முத்துஹெட்டிகம, மொஹான் லால் கிரேரு, சாகல ரத்நாயக்க ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Powered by Blogger.