தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச நிவாரணப் பொதி - சந்தாப் பணத்தை அறவிடாதிருக்கவும் தீர்மானம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாவை (தொழிற் சங்கங்களுக்கு தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்படும் அங்கத்துவத்திற்கான கட்டணம்) அறவிடாமல் இருப்பதற்கு தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவக அலுவலகத்தில் நேற்று (25.03.2020) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடாபாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில் அரிசி, மாவு, பருப்பு உட்பட 6 பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதி தோட்டத்திலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக நிவாரணப்பொதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டதாக தெவித்த அமைச்சர் , பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அந்தப்பட்டியல் அரச அதிபருக்கு வழங்கப்பட்ட பின்னர் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும். அதேபோல் ச.தொ.ச. நிறுவனமானது லொறிகள் ஊடாகவே தோட்டங்களுக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருக்கின்றது. இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனமும் லொறிகளில் சென்று மீன்களை விற்பனை செய்யவுள்ளது என்றும் கூறினார்.
அரசால் வழங்கப்படும் நிவாரணப்பொதியை இலவசமாகவும், ஏனையவற்றை பணம் கொடுத்தும் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொது இடங்களில் கூட்டமாக நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மக்களின் நலன்கருதியே அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, அதனை உரிய வகையில் பின்பற்றுமாறும், சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்த அமைச்சர் , சில தோட்டங்களில் கம்பனிகள் தொழிலாளர்களிடம் கையொப்பம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. அனைத்துவித சுகாதார வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என கூறியே மக்களிடம் கையொப்பம் திரட்டப்படுகின்றது. ஆனால், சில கம்பனிகள் எவ்வித ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கவில்லை. எனவே, கையொப்பமிட வேண்டாம் என தொழிலார்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். சவக்காரம், கைகளை சுத்தப்படுத்தும் திரவம் உட்பட எல்லாம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவே வழங்கப்பட்டுவருகின்றது.
அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு சில கம்பனிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன. மேலும் சில கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன. எனினும், அடுத்த புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். அது எமது மக்களுக்கு சார்பான தீர்மானமாகவே இருக்கும் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேலும் கூறினார்.
அரச தகவல் திணைக்களம்
கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவக அலுவலகத்தில் நேற்று (25.03.2020) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடாபாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில் அரிசி, மாவு, பருப்பு உட்பட 6 பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதி தோட்டத்திலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக நிவாரணப்பொதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டதாக தெவித்த அமைச்சர் , பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அந்தப்பட்டியல் அரச அதிபருக்கு வழங்கப்பட்ட பின்னர் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும். அதேபோல் ச.தொ.ச. நிறுவனமானது லொறிகள் ஊடாகவே தோட்டங்களுக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருக்கின்றது. இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனமும் லொறிகளில் சென்று மீன்களை விற்பனை செய்யவுள்ளது என்றும் கூறினார்.
அரசால் வழங்கப்படும் நிவாரணப்பொதியை இலவசமாகவும், ஏனையவற்றை பணம் கொடுத்தும் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொது இடங்களில் கூட்டமாக நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மக்களின் நலன்கருதியே அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, அதனை உரிய வகையில் பின்பற்றுமாறும், சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்த அமைச்சர் , சில தோட்டங்களில் கம்பனிகள் தொழிலாளர்களிடம் கையொப்பம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. அனைத்துவித சுகாதார வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என கூறியே மக்களிடம் கையொப்பம் திரட்டப்படுகின்றது. ஆனால், சில கம்பனிகள் எவ்வித ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கவில்லை. எனவே, கையொப்பமிட வேண்டாம் என தொழிலார்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். சவக்காரம், கைகளை சுத்தப்படுத்தும் திரவம் உட்பட எல்லாம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவே வழங்கப்பட்டுவருகின்றது.
அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு சில கம்பனிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன. மேலும் சில கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன. எனினும், அடுத்த புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். அது எமது மக்களுக்கு சார்பான தீர்மானமாகவே இருக்கும் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேலும் கூறினார்.
அரச தகவல் திணைக்களம்

Post a Comment