நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்குச் சட்டம்
நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை காவல் துறை ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று முற்பகல் 9 மணிமுதல் தற்காலிகமாக காவல் துறை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதோடு மதியம் 12 மணிமுதல் மீண்டும் அமுலாகும் என காவல் துறைமா அதிபர் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை காவல் துறை ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று முற்பகல் 9 மணிமுதல் தற்காலிகமாக காவல் துறை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதோடு மதியம் 12 மணிமுதல் மீண்டும் அமுலாகும் என காவல் துறைமா அதிபர் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment