Header Ads

பொதுஜன பெரமுனவை நம்பிய ரத்ன தேரரை ஏமாற்றத்தில்

மஹாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக பௌத்த தேரர்களுக்கு வேட்பு மனு வழங்காமல் இருக்கவும் அவர்களுக்கு தேசிய பட்டியல் வழங்காமல் இருக்கவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக ரத்தன தேரருக்கு வேட்புமனுவோ தேசிய பட்டியலோ ரத்தன தேரருக்கு வழங்கப்படாது என கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்துள்ள ரத்தன தேரர் தனி கட்சி ஆரம்பிக்க ஆலோசித்துவருவதாக கூறப்படுகிறது.

நேற்றைய தினம் ரத்தன தேரர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் இந்த அரசையும் விமர்சித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.