Header Ads

சிகரட்டால் 05 நண்பர்களுக்கு பரவிய கொரோனா

ஜா எல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் தாம் பிடித்த சிகரெட்டை ஐந்து பேரிடம் பகிர்ந்துள்ளதும் அப்படி சிகரெட்டை பிடித்தவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் சிகரெட் பாவனை மூலமும் கொரோனா தொற்று ஏற்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையில் சிகரெட் மற்றும் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றை வைத்திருக்கும் பலர் தமது நட்பு வட்டாரங்களுடன் பகிரும் நிலைமை உள்ளது.

இப்படி பகிர்வதால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் பயன்படுத்தியதை வேறு ஒருவர் பயன்படுத்தும்போது தொற்றும் அதனுடன் சேர்ந்து பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Powered by Blogger.