Header Ads

தாயைக் காப்பாற்றச் சென்று தந்தையின் கத்திக் குத்துக்கு இலக்கான 13 வயது மகள்

கட்டுகஸ்தோட்டை, வெருல்லகம பகுதியில், தந்தையின் கத்திக் குத்தில் படுகாயமடைந்த நிலையி;ல, 13 வயது சிறுமி ஒருவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் என்று, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயது நபரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்காக சென்ற போது, சிறுமி கத்திக்குத்துக்கு இலக்கானதாக தெரியவருகிறது.

சிறுமியின் பிறப்புறுப்பு பகுதியிலேயே கத்தி வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர் மிகவும் ஆபத்தான நிலையில், தித்தபஜ்ஜல வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டு, மேலதிகச் சிகிச்சைக்காக, கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.