Header Ads

பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் சர்ஃபராஸ், கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

கொவிட்-19 தொற்று காரணமாக பாகிஸ்தானின் முன்னாள் முதற்தர கிரிக்கெட் வீரர் ஷபர் சர்ப்ராஸ் உயிரிழந்துள்ளார்.

50 வயதான அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொவிட்-19 தொற்று உறுதியான ஷபர் சர்ப்ராஸ் கடந்த 7 ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்ச அறிவித்துள்ளது.

1988 மற்றும் 1994 வரையான காலப்பகுதியில் ஷபர் சர்ப்ராஸ் 15 முதற்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Powered by Blogger.