அம்பாறையில் சில பிரதேசங்களுக்கு உடனடி ஊரடங்குச் சட்டம்
அம்பாறையின் இரண்டு பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உஹன, தமன பகுதியில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.
இதேவேளை பொலன்னறுவையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட கடற்படை சிப்பாய் பழகியிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் வெலிஸர முகாமில் அவருடன் பழகியிருந்த அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. அதில் 29 பேருக்கு தொற்று இருக்கக் காணப்பட்டது.

Post a Comment