Header Ads

இன்று காலை 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து



 தெற்கு அதிவேக வீதியின் கஹத்துவ நுழைவாயிலில் இருந்து 7வது மைல்கள் அருகே 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலை தெளிவின்றி காணப்படுவதனால் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரு பஸ், இரண்டு கார்கள், இரண்டு சிற்றூர்திகள் மற்றும் ஒரு ஜீப் ஆகியன இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி உள்ளன.

இந்நிலையில் சீரற்ற வானிலை காரணமாக அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகள் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.



Powered by Blogger.