Header Ads

கோட்டாபயவுக்கு ஆதரவளிக்க தயாராகும் ரணிலுக்கு மிக நெருக்கமானவர் யார்?



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிக விரைவில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி இணைந்துக்கொள்ள உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த சில தினங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் எமது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் அவர் யார் என்பதை எங்களால் வெளியிட முடியும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.