Header Ads

இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான இராணுவ வீரர்கள் பலர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்


இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 04 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இதுதவிர ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவுவதை முறியடிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Powered by Blogger.