Header Ads

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை



இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டணை விதிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவவில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

நாட்டுக்காக சிறந்த அக்கறை கொண்ட சமூகங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எந்தவொரு சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களைவிட முன்னுரிமை வழங்கப்படமாட்டாது.

நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

எனது அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார். அவரது கடமைகளில் நான் தலையீடு செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.