Header Ads

கிளிநொச்சியில் அரச அதிகாரிகள் பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு




கிளிநொச்சி  பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம். மதுவரித் திணைக்களத்தின் வாடகை வாகனம் சேதம்

இன்று காலை (14) கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்படடுள்ளார்.கெப்பரிக்கொலாவ மதுவரித்திணைக்களத்தின் வாடகை வாகனம் சேதமடைந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கிளிநொச்சி பாரிய போதைப்பொருள் கடத்தல் இடம்பெறவுள்ளதாக மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவரும் உத்தியோகத்தர் ஒருவரும்  வாடகைக்கு வாகனம் ஒன்றில் தேடுதலை மேற்கொள்ள தகவல் வழங்கிய மன்னாரைச் சேர்ந்த நபருடன் அறிவியல்நகர் காட்டுப் பகுதிக்குள்  சென்றுள்ளனர்.


இதேவேளை கிளிநொச்சி பொலிஸாருக்கும்  போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே பொலிஸ் அணியொன்றும்  குறித்த பகுதிக்குள் தேடுதல் மேற்கொள்ள சென்றுள்ளனர்.

மதுவரித் திணைக்களம் மற்றும் பொலிஸார் ஆகிய இரண்டு தரப்பினனர்களுக்கும் இடையே தொடர்பாடலற்ற நிலையில்  சிவில் உடையில் சென்ற பொலிஸார்  வாடகை வாகனத்தில் வந்த மதுவரித் திணைக்கத்தின் வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போது அவர்கள் வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே வாகனத்தின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தகவல் வழங்கிய மன்னாரைச் சேர்ந்த நபரே காயமடைள்ளார.

கெப்பரிகொலாவ பிரதேசத்தை சேர்ந்த மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி  உள்ளிட்ட குழுவினரே கிளிநொச்சிக்கு பயணித்து பெருமளவு பணத்துடன் போதைப்பொருளை கொள்வனவு செய்பவர்கள் போன்று சென்று காத்திருந்த போதே   சிவில் உடையில் சென்ற பொலிஸார் வாகனத்தை நிறுத் த முற்பட்டுள்ளனர்.
இதன் போதே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.


சம்பவத்தில் அந்த வாகனத்தில் பயணித்த 38 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவர் காயமடைந்துள்ளார்.அவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.