Header Ads

மஹிந்தவுடன் முரண்படும் பந்துல - எமக்கு உரிமை இருக்கிறது






படைவீரர்களுக்கு இடம்பெற்ற அநீதிகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

யுத்தம், யுத்தவெற்றி அல்லது யுத்தவீரன் உள்ளிட்டவற்றை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

'நாட்டை பாதுகாக்கும் யுத்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் தொடர்பில், தேர்தல் மேடைகளில் மக்களுக்கு கூற வேண்டிய கதைகள் உள்ளன' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.