அரசாங்கம் நாட்டு மக்களிடம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
இலங்கையின் 72ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, நாளையிலிருந்து (1) ஒரு வாரத்துக்கு சகல அரச, தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்றுமாறு, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 3, 4ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களையும் மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வீடுகளிலும் தேசிய கொடிகளை தொங்கவிடுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post a Comment