Header Ads

கொரோனா நோய் அறிகுறி நபரால் களுவாஞ்சிக்குடியில் பதற்ற நிலை

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மருத்துவமனைக்கு முன்பாக தற்போது பதற்றநிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.


சீனாவிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் சந்தேகம் இருப்பதால் அரச மருத்துவமனை அம்பியூலன்ஸில் களுவாஞ்சிக்குடி மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மருத்துவமனைக்கு முன்பாக மக்கள் திரண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவத்தை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.