Header Ads

அட்டுலுகம கொரோனா தொற்றாளரின் தந்தை மற்றும் சகோதரியின் நிலை

பண்டாரகம அட்டுலுகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரின் தந்தை மற்றும் சகோதரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் காணப்பட்ட காரணத்தினால் குறித்த இருவரும் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் நாட்டில் இரண்டு நாட்கள் கழித்து விட்டு கடந்த 19ஆம் திகதி இலங்கை வந்த நபர் கடந்த 6 நாட்களாக அட்டுழுகம பிரதேசத்தின் பல இடங்களுக்கு சென்றுள்ளார்.

அவர் பலருடன் நெருக்கமாக பழகியதாக தெரியவந்துள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவரின் தந்தையும் சகோதரியுமே இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.