Header Ads

ரணிலுக்கு ஞானம் பிறந்து அவர் எம்முடன் இணைவார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு திடீர் ஞானம் பிறந்து அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் வந்து இணைவார் என தாம் நம்புவதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷமன் செனவிரத்ன,  ரணில் விக்கிரமசிங்க கட்சி பிரிவனையின்றி நாடு பற்றியும் நாட்டின் எதிர்காலம் பற்றியும் சிந்தித்து, ஒன்றிணைந்து எம்முடன் பயணிப்பார் என்றும் தெரிவித்தார். 

​நேற்று (3) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Powered by Blogger.