Header Ads

ஜனாதிபதியின் அடுத்த அதிரடி; சில நிதிச் சேவைகைள் அத்தியவசிய சேவையாக பிரகடனம்

இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கி, திறைசேரி மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி, ஏனைய வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிளைகள், திறைசேரி என்பனவற்றை திறந்து வைத்திருக்குமாறு, ஜனாதிபதி செயலாளரினால், மத்திய வங்கி ஆளுநருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊடரங்கு சட்டம் அமுலாகும் காலப்பகுதியில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Powered by Blogger.