Header Ads

இன்று சந்திப்பு நடத்திய ஜனாதிபதி மற்றும் சஜித் - முக்கியமாக பேசப்பட்ட விடயங்கள்

எந்தவித பாகுபாடின்றியும் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளாதக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகின்ற இந்த நிலையில நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் கலந்துறையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தாரர்.

இதன்போது கொரோனாவை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைதிட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள வேலைதிட்டங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அதன் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததுடன், அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட மேலும் சிலரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.