Header Ads

22 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு

உத்தியோகபூர்வ அரச இல்லங்களை மீள கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட பதவிகளை வகித்த 22 பேர் இதுவரையில் தங்களது அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும், பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களாகவும் முக்கிய பதவிகளை வகித்த இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது.

அரச நிர்வாக அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

ரவூப் ஹக்கீம், ரவீந்திர சமரவீர, அப்துல் ஹாலீம், சாந்தனி பண்டார, லக்ஸ்மன் செனவிரட்ன, அமீர் அலி, எட்வட் குணசேகர, நலின் பண்டார, ஜே.சீ.அலவத்துவல, அசோக அபேசிங்க, சம்பிக்கா பிரேமதாச, வடிவேல் சுரேஸ், எச்.எம்.எம்.ஹாரீஸ், பைசல் காசீம், துலிப் விஜேசேகர, துனேஸ் கன்கந்த, பைசர் முஸ்தபா, ரீ.பி.ஏக்கநாயக்க, சந்திம வீரக்கொடி, எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ், ஜகத் புஸ்பகுமார மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே இவ்வாறு தங்களது அதிகாரபூர்வ இல்லங்களை இதுவரையில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.