Header Ads

மைத்திரி நடத்திய முதலாவது ஊடக சந்திப்பில் வௌியிட்ட அதிரடி அறிவிப்பு

சுகாதார துறையினரின் ஆலோசனை மற்றும் அறிக்கைகளை பெற்று உடனடியாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று மாலை டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அதன்பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு டாலி வீதியில் உள்ள தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஸ்ரீ லங்கா பொது ஜன கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் பின் ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.