Header Ads

நாட்டை இயல்பு நிலைக்கு திருப்பும் பணியின் இறுதிக்கட்டம்

நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலைகள் ஆர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அங்கு கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து உள்ளூராட்சி சபைகளிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுச் செல்லும் பணியில் இறுதிக் கட்டம் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதேயாகும் எனவும் கல்வியமைச்சர் இதன்போது குறி்ப்பிட்டார்.

நேற்று (11) மாத்தறை மாவட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.