பொறியியல் பட்டதாரி; உயர்தர வகுப்பு ஆசிரியர்; ஈஸிகேஷ் மூலம் செய்துவந்த பிஸ்னஸ்
ஈஸிகேஷ் முறையில் பணம் பெற்றுக் கொண்டு ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட உயர் தர மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு நடாத்தும் ஆசிரியர் ஒருவரும் அவரது இளைய சகோதரர் ஒருவரும் மாரவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்படும் போது இருவரிடத்திலும் 560 மில்லி கிராம் மற்றும் 440 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் தனது இளைய சகோதரருடன் இணைத்து போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட குறித்த நபர், முக்கிய ஹெரோயின் விற்பனையாளர்களிடமிருந்து ஹெரோயினை பெற்று அதனை தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து ஈஸி கேஷ் மூலமாகப் பணத்தைப் பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மாரவில பொலிஸார் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment