Header Ads

பேசு பொருளாகியுள்ள சஜிதின் இறப்பர் செருப்பும் அலு­வ­லக பதி­வாளர் போன்ற ஆடையும்



பழைய இறப்பர் செருப்பும், அரச அலு­வ­லக பதி­வாளர் போன்ற ஆடையும் அணிந்­தி­ருக்கும் சஜித் பிரே­ம­தா­சவிற்கு எவ்­வாறு வாக்­க­ளிப்­பது என்று சிலர் பேஸ்­புக்கில் விமர்­சிக்­கின்­றார்கள்.

ஆனால் இவற்­றி­லி­ருந்தே சஜித் பிரே­மதாச பொது­ மக்­களின் சேவை­யாளன் என்பது தெளி­வா­கின்­றது.

அத்­த­கைய ஒரு­வ­ருக்கு இம்­ முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிக்கப் போகின்­றீர்­களா? அல்­லது நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கவும், பிர­த­ம­ரா­கவும் ராஜபக்ஷவே செயற்­படும் வகையில் ஒரு குடும்­பத்­திடம் நாட்டைக் கையளிக்கப் போகின்­றீர்­களா? என்று தொலைத்­தொ­டர்பு, டிஜிட்டல் உட்கட்ட­மைப்பு வச­திகள், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்­துறை அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ கேள்வி எழுப்பியிருக்­கிறார்.

ஹப்­புத்­தளை நகரில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை ஏற்­பாடு செய்யப்­பட்­டி­ருந்த புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் மக்கள் கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,

இப்­போது தான் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த எமது மனங்­களில் அரசியல் ரீதியில் ஒரு­வித தைரியம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனெனில் சுமார் 25 வரு­டங்களுக்கும் அதிக காலத்தின் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்த ஒரு­வரை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்­கான பய­ணத்தை நாங்கள் ஆரம்பித்­தி­ருக்­கின்றோம்.

நாம் முன்­னின்று போராடி ஜனா­தி­ப­தி­யாக்­கிய ஒருவர் வேறு ஒரு கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்ட போது ஐக்­கிய தேசியக் கட்சி கைவி­டப்­பட்­டது.

அத்­த­கை­ய­தொரு தரு­ணத்தில் கடந்த காலத்தில் நாம் மிகவும் நேசித்த ஜனாதி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் மகன் சஜித் பிரே­ம­தாச நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகும் போராட்­டத்தில் இறங்­கி­யி­ருக்­கின்றார் என்­பதை மிகவும் பெரு­மை­யுடன் கூறிக்­கொள்­கின்றோம்.


சிலர் பேஸ்புக் பக்­கங்­களில் சஜித் பிரே­ம­தா­சவை விமர்­சிக்­கின்­றார்கள். பழைய இறப்பர் செருப்பும், அரச அலு­வ­லக பதி­வாளர் போன்ற ஆடையும் அணிந்­தி­ருக்கும் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு எவ்­வாறு வாக்­க­ளிப்­பது என்று அவர்கள் கேட்­கின்­றார்கள்.

ஆனால் இவற்­றி­லி­ருந்தே சஜித் பிரே­ம­தாச பொது­மக்­களின் சேவை­யாளன் என்­பது தெளி­வா­கின்­றது. அவ­ருக்கு மாளிகை போன்ற இல்­லங்­க­ளுக்கோ அல்­லது வெளி­நாட் டுக் கல்­விக்கோ எவ்­வித குறையும் இருக்­க­வில்லை. ஆனால் சாதா­ரண மக்கள் மத்­தியில் சென்று சேவை­யாற்ற வேண்டும் என்பதே அவ­ரு­டைய எதிர்­பார்ப்­பாக இருந்­தது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் அவரை எதிர்த் துக் கள­மி­றங்­கி­யி­ருக்­கின்ற கோத்தபாய (அச்சம்) என்ற மனிதர் அர­சி­யலில் பிர­தே­ச­ சபைத் தேர்­தலில் கூட கள­மி­றங்­கி­ய­தில்லை.

குறைந்­த­பட்சம் பிர­தே­ச­ சபை நிர்­வாகம் தொடர்பில் கூட அறி­யாத நபரொருவரால் இந்த நாட்டைச் சீர­மைக்க முடியும் என்று கரு­து­கின்­றீர்­களா? ஆனால் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு பௌத்த, இந்து, இஸ்­லா­மிய, கத்­தோ­லிக்க மதத்தைச் சார்ந்­த­வர்கள் அனை­வரும் ஒன்­றுதான்.

No comments

Powered by Blogger.