Header Ads

சஜித்தின் ஆரம்பமே தோல்வியா? சிங்கள ஊடகம் வௌியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்


நேற்று நடைபெற்று முடிந்த எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படு தோல்வியை அடைந்துள்ளது.

இந்த தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவால் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ள போதிலும் லே்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 பொதுத் தேர்தலில் எல்பிட்டய தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 40.8%இற்கும் அதிக வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்டுள்ளது.

எனினும் சஜித் பிரமேதாஸவின் வழிநடத்தலில் நேற்று 24%வாக்குகளையே ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆகவே சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளர் ஆனதன் பின்பு எல்பிட்டிய தொகுதியில் மாத்திரம் 16 வீதமான பின்னடைவை சந்தித்துள்ளார்.

எல்பிட்டிய தேர்தல்; மொட்டு மலர்ந்தது; UNP படுதோல்வி; முழு விபரம் இதோ!

Powered by Blogger.