நாளை சஜித்துடன் கைகோர்க்கும் சந்திரிகா - நாளை முதல் சஜித்தின் மேடையில் சந்திரிகா
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்
பிரேமதாஸாவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க நாளை அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.
நாளை காலை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை முதல் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் முக்கியமான கூட்டங்களிலும் சந்திரிகா கலந்து கொள்ளவுள்ளார்.
அதேபோல இதர கட்சிகளுடனும் ஒப்பந்தமொன்று செய்யப்படும் .

Post a Comment