சுமந்திரனுடன் தொலைபேசியில் உரையாடிய கோட்டாபய ராஜபக்ஷ; என்ன பேசினார்?
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமிழ் மக்களின்
ஆதரவை பெற்றுக்கொள்வதில் பொதுஜன பெரமுனவினர் கடும் முயற்சிகளை
முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இருவருமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்னர்.
இந்நிலையில் மஹிந்த, கோட்டாபாய , பசில் ராஜபக்ஷவினர் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசுவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூட்டமைப்பின் பேச்சசாளர் சுமந்திரனிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது,
கோட்டாபய ராஜபக்ஷ எனக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்க முடியுமா என கேட்டார்.
"தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார்.
அதற்கமையவே நான் உங்களை தொடர்புகொண்டேன். எப்போது நாம் பேசலாம்" என கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் கேட்டார்.
எனினும் கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து சில விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இதில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை எமக்கு பெற்றுகொடுக்க முடியுமா என்ற கோரிக்கையை என்னிடம் முன்வைத்தார்.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை நான் அவருக்கு எடுத்துக்கூறியிருந்தேன் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இருவருமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்னர்.
இந்நிலையில் மஹிந்த, கோட்டாபாய , பசில் ராஜபக்ஷவினர் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசுவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூட்டமைப்பின் பேச்சசாளர் சுமந்திரனிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது,
கோட்டாபய ராஜபக்ஷ எனக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்க முடியுமா என கேட்டார்.
"தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார்.
அதற்கமையவே நான் உங்களை தொடர்புகொண்டேன். எப்போது நாம் பேசலாம்" என கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் கேட்டார்.
எனினும் கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து சில விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இதில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை எமக்கு பெற்றுகொடுக்க முடியுமா என்ற கோரிக்கையை என்னிடம் முன்வைத்தார்.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதை நான் அவருக்கு எடுத்துக்கூறியிருந்தேன் என்றார்.

Post a Comment