Header Ads

பெயரில் ஏற்பட்ட குழப்பத்தால் வடக்கில் எதிர்பாராத வாக்குகளைப் பெறும் வேட்பாளர்





ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபெறுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், வடக்கு மாகாணத்தில் வேட்பாளர் ஒருவருக்கு எதிர்பாராத வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

வட மாகாணத்தில் பெரிதும் பிரபல்யம் இல்லாத ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார்.

வட மாகாணத்தில் எந்தவித தேர்தல் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளாத கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஆரியவன்ச இந்த வாக்குகளை பெற்றுள்ளார்.

சின்னம் மற்றும் பெயரில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இவ்வாறு வாக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.

அன்னம் சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு பதிலாக கழுகு சின்னத்திற்கு வாக்களித்திருக்கலாம் அல்லது தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க வாக்களிப்பதற்கு பதிலான ஆரியவன்ச திசநாயக்க வாக்களித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்தில் அனுரகுமார திசாநாயக்க பெரும் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதும் பாரிய பின்னடைவை கண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிரபலமான வேட்பாளராக அனுரகுமார திசநாயக்க இருந்த போதும், அவர் போட்டியிட்ட திசைகாட்சி சின்னம் அந்தளவுக்கு பிரபலப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.