சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற நிலயைால் இருவர் கைது
நாடு பூராகவும் ஜனாதிபதித் தேர்தல் இன்று அமைதியாக இடம்பெற்று முடிந்த பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் சற்று அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லப்பட்ட பின்னர் இரவு 7 மணியளவில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளை கூச்சலிட்ட இளைஞர்களால் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் சம்பவத்தை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு சம்பவத்தோடு தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment