1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு திகாம்பரம் விதித்துள்ள நிபந்தனை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித தொழில் நிபந்தனைகளும் விதிக்கப்படாமல் அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டால் அதனை வாழ்த்தி வரவேற்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு என்பது நல்ல விடயம். வழங்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட்டால் அதனை வாழ்த்தி வரவேற்போம்
எனினும், இந்த சம்பள உயர்வை அடிப்படையாகக்கொண்டு தொழிலாளர்களுக்கு தொழில் சுமை அதிகரிக்கப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் 18 கிலோ என்பது அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. மழைக்காலங்களில் கொழுந்து இருக்கும். ஆனால், வெயில் காலங்களில் அது சாத்தியப்படாது. தற்போதைய காலநிலையில் 18 கிலோ கொழுந்து கொய்வதே கடினமாகத்தான் இருக்கின்றது.
எனவே, என்ன நடக்கபோகின்றது என்பதை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அடிப்படை சம்பளமாக ஆயிரம் கிடைத்தால் நிச்சயம் வரவேற்போம். மற்றவர்களைப்போல் காலைவாரும் செயலில் ஈடுபடமாட்டோம்.

Post a Comment