ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 197 பேர்
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 197 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், குறித்த தாக்குதலுடன் நேரடி தொடர்புகளையுடைய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இதற்குப் பின்புலத்தில் செயற்பட்டவர்கள் தொடர்பில், பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment