Header Ads

மற்றையவர்களின் மதத்தை ஏனையோர் ஏற்றுக் கொள்ள வேண்டும்



அனைத்து பிரஜைகளுக்கும் தத்தமது சமயவழிபாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க
தெரிவித்துள்ளார்.

அம்பாறை அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எவருக்கும் மற்றவர்களின் மதத்தை உயர்த்தி அல்லது தாழ்த்தி
பார்ப்பதற்கு இடமளிக்க முடியாது எனவும் மாறாக மற்றையவர்களின் மதத்தை ஏனையோர் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அந்தவகையில் அனைவருக்கும் தத்தமது மதங்களை பின்பற்ற உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தாத தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டியெழுப்பகூடிய நாட்டை கட்டியெழுப்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Powered by Blogger.